N. Natarajan
அன்பார்ந்த ஜோதிட அபிமானிகளுக்கு அன்புகலந்த வணக்கத்துடன் V.J. சிஷ்டம் என்ற இந்நூல் 40 வருட அனுபவத்தில் ஏற்பட்ட தொகுப்பாக வெளியிடப்பட்டு உள்ளது மரபு ஜோதிடத்தில் இருந்து சற்று மாறுபட்டது நவாம்ஸத்தையும் ராசியையும் இணைத்து ஓ கிரகங்களும் 96 இடங்களில் வியாபகமாய் உள்ளது என்று பாவித்து நட்சத்திரத்தையும் பின்பு கிரகத்தையும் கடைசியாக பாவகத்தையும் இணைத்தோ சொல்லக் கூடியது. முக்கியமாக பிரசன்ன ஆருடம் போலவே சற்று ஓரைகளின் துணைகொண்டு ராசிகள் கண்டு அதை மூலத்திரி கோணம் விடுதி என்று உள்ள ராசிகளுக்கு பகிர்ந்து 60 நிமிடத்தைக் கொடுத்து அதில் 9 பாதங்களுக்கு உள்ள நிமிடங்களை வியாபகம் செய்து லக்னம் கண்டபின் ஆருட ஜாதகத்தின் துணை கொண்டு வாழ்க்கை சம்பவங்களை சொல்வதுடன் எதிர்கால சம்பவங்களையும் சுமார் 60 வயதுவரை சொல்வதுடன் சம்பவங்கள் உறுதியாக நடப்பதற்கு சாட்சிகளைக் கொண்டு தீர்மானித்துச் சொல்லும் காரணத்தால் கேட்பவர்களுக்கு ஆச்சரியம் ஊட்டும் வகையில் உள்ளதால்தான் இதற்கு விசித்திர ஜோதிடமுறை அல்லது V.J. சிஷ்டம் என்று சொல்வார்கள். கடந்த 25 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான பேருக்கு பலன் சொல்லி ஆச்சரியம் - ஏற்படும் வகையில் சொன்னதனால் “யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டும் என்பதால் இதைப் பலரும் கற்று ஆனந்தம் அடைவதுடன் ஒரு கண்டு பிடிக்கப்பட்ட கருத்துகள் ஏராளமாக உள்ளதால் எல்லாவகையிலும் இன்றைய ஜெனரேசனுக்கு இதைப் பயன்படுத்தி முழுமையான வெற்றி காணலாம். நேரில் பலன் சொல்லி சாட்சிகள் சொல்லி அசரவைத்த வழிமுறைகள் இருக்கின்றன. இதைக் கற்று பயன் அடைந்து ஒவ்வொரு ஜோதிடரும் விற்பன்னர் ஆவதற்கு எனக்கு மனதார ஆசை. எல்லாம் வல்ல இறைவன் எனது ஆசையை நிறைவேற்ற அருள்புரிய வேண்டுகிறேன்.
இங்ஙனம், N. நடராஜன்
ஜோதிடத் துறையில் மரபு ஜோதிடம் K.P. சிஷ்டம் - மற்றும் விசித்திர ஜோதிட முறை இவற்றில் நன்கு அனுபவம் பெற்றவர் - 40 வருடங்களாக ஜோதிடத் தொழில் புரிந்த அனுபவம் பெற்றவர் புதுமையான முறையில் இன்றைய ஜெனரேசனுக்கு ஏற்ப அற்புதமான பலன்களை சொல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் கண்டுபிடிப்புகள் போல பல கோணத்திலும் ஆராய்ந்து துல்லியமான பலன் சொல்வதில் தேர்ச்சி உள்ளவர்.
நவ இந்தியா என்ற தினசரி நாளிதழில் சுமார் 4 ஆண்டு காலம் வரையில் வாரா வாரம் ஜோதிடர் கேள்வி பதில் பகுதியில் எழுதி வந்தவர். ஜோதிடக் கடல் என்ற பத்திரிக்கையில் பல்வேறு கட்டுரைகள் எழுதி வந்தவர். அமெரிக்கா போன்ற நாட்டில் இந்தியர்களுக்கு போன் மூலம் மற்றும் FAX மூலம், E மெயில் மூலம் பலன் அனுப்பி புகழ் பெற்றவர். ஜோதிடம் பார்க்கும்போது சம்பவங்கள் நடப்பதற்கு வேண்டிய சாட்சிகள் போல சிறுசிறு குறிப்புகள் சொல்லி ஆச்சரியப்படுத்துபவர். ஒரே நபருக்கு 6 மாதங்கள் வரை 180 நாட்கள் வரை தினப் பலன்போல் பார்த்து 500 கேள்வித் தொகுப்புகள் உருவாக்கியவர். விசித்திர ஜோதிட முறை என்னும் V.J. சிஷ்டம் என்று ஒரு தியரியை உருவாக்கி ஜோதிடம் பார்ப்பவர். வாரியார் சுவாமிகளால் பொன்னாடை சாத்தப்பட்டு விசித்திர ஜோதிட வித்யா நிதி என்று பட்டம் பெற்றவர்.