அம்மாவின் மீது அபரீதமான அன்பு செலுத்தும் மகள்
மகளுக்காகவே உயிர்வாழும் அம்மா...
இவர்கள் உறவில் ஏற்படும் சிக்கல்...
மகளின் காதலை ஏற்றுக்கொள்ள மறுக்கும் தாய்...
காரணத்தைத் தேடும்போது மகள் அறிந்துகொள்ளும் உண்மை...
‘யார் அந்த நிலவு’ என்ற இந்நாவல் உறவுகளின் மேன்மையை மனதின் ஏக்கங்களை ஆழமாக எடுத்துச் சொல்கிறது. உயிரோட்டமான இக்கதை படிப்பவர் மனதில் நிலைத்திருக்கும் என்ற நம்பிக்கையுடன்
- பரிமளா ராஜேந்திரன்
அன்பான குடும்பத்தில் அழகான குடும்ப தலைவியாக இருப்பவள் நான்.பிறந்தது தஞ்சை மண்ணில் வளர்ந்தது சென்னையில் வாழ வந்தது செட்டிநாட்டு நகரமான காரைக்குடியில்..
எழுத்துலகில் நுழைந்து இருபதுவருடமாகிறது. தினமலர்_வாரமலர் இதழ் டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது என்னுள் இருந்த எழுத்தாற்றலை தூண்டியது.
என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளே என் கதைக்கு கருவாக அமைந்தது.
இதுவரை 300 மேற்பட்ட சிறுகதைகள் தினமலர் -வாரமலர், ராணி,தேவி,மங்கையர்மலர்,ஆனந்தவிகடன் போன்ற பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன.
பல சிறுகதைபோட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளும் பெற்றுள்ளேன்.
150க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளேன். என்படைப்புகள் படிப்பவர் மனதில் சிறுதாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதை என் எழுத்துக்கு கிடைத்த வெற்றியாக மனமுவந்து ஏற்றுக்கொள்வேன்.இனிஎன்கதைகள் உங்களுடன் பயணிக்க போகிறது.வாசகர்களாகிய உங்கள் ஆதரவுடன் என் எழுத்து பயணம் இனிமையாக தொடரும்.
Rent Now