எனது வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஒரு பக்கம் பத்திரிகைள் இன்னொரு பக்கம் சினிமா. அதாவது சின்னத்திரை தொடர்கள். 1979 ஆம் ஆண்டு நான் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினேன். எழுத வந்து நாற்பத்தி ஒரு ஆண்டுகள் ஆகி விட்டது. சென்னை பொதிகை தொலைகாட்சிக்கு ஒரு மணி நேர நாடகங்களை எழுதத்தொடங்கிய ஆண்டு 1986. வாரத்தொடர்களில் தொடங்கி மெகா தொடர்கள் வரை வளர்ந்து பல சேனல்களுக்கு எழுத வந்தது 1995 ஆம் வருடம். அப்படி பார்த்தால் விஷுவல் மீடியாவில் இது வெள்ளி விழா ஆண்டு. பத்திரிகைகளில் சின்னத்திரையில் பேரும் புகழும் பெற்று இந்த அளவுக்கு வளர்ந்து வர என்னை ஏற்றி விட்ட ஏணிகள் ஏராளம். சின்னத்திரையிலும் பத்திரிகைகளிலும் என்னை வளர்த்து விட்ட அவர்களைப் பற்றி நான் சொல்ல வேண்டிய செய்திகள் ஏராளம். இந்த கொரோனா கால கட்டத்தில் எழுதும் பணிகள் நிறைய இருந்தாலும் சற்றே ஓய்வும் கிடைக்கிறது. அதனால் என்னை ஏற்றி விட்ட ஏணிகளை பற்றி முகநூல் நட்புகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த நாற்பதாண்டு அனுபவங்களை அதில் நான் உழைத்த ரசித்த நெகிழ்ந்த மகிழ்ந்த சம்பவங்களை வெகு விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வருகிறேன். ஏணிப்படிகள் என்ற முகநூல் தொடர் எனது அனுபவங்கள். முதலில் எனது ஆசான் மறைந்த ஆனாலும் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற இயக்குநர் சிகரம்.கே.பாலசந்தர்.
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai. Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Rent Now